Saturday, January 9, 2010

என் மௌனம் ஒரு போதும் சம்மதமில்லை

என் மௌனம்
ஒரு போதும் சம்மதத்தின் குறியீடல்ல...

பல நேரம் அது கோபத்தின்
சில நேரம் என் கையாலாகதனத்தின்
அடையாளம் அது ....

மனசு வலிக்க அழுதிருக்க வேண்டிய
சில சமயங்களில்
நான் மௌனமாய் இருக்க நேர்ந்ததுண்டு .....

உன் தவறுகளை
என் மௌனத்தால் மன்னித்துவிட்டதாக
நினைத்து கொள்ளாதே....

மௌனம் எப்போதும் மறுதலித்தலின்
அடையாளம்....
ஒரு போதும் அது சம்மதமில்லை.....



No comments:

Post a Comment