Sunday, January 10, 2010

இப்போதாவது சொல்லுங்கள்.....

உனக்கும் எனக்கும் தனித்தனியே
கல்யாணமாயிற்று.....
குழந்தைகளுமாயிற்று...
வயதுமாயிற்று.....

நீ உன் கணவனையும்
நான் என் மனைவியையும்
நேசிக்கிறோம் என்பது உறுதியுமாயிற்று...

இன்னும் உன் மேல் குறையாமல்
இருக்கும் என் காதலை
இப்போது இவர்கள்
காதல் என்று தானே
சொல்லியாக வேண்டும்.....

No comments:

Post a Comment