Wednesday, January 13, 2010

புரிந்தது....

கண்ணீரை கண்ணுக்குள் புதைத்து...
உணர்ச்சியெல்லாம் உதடு கடித்து
மறைத்து.....
படபடக்கும் கரங்களை ஒன்றுக் கொன்று
ஆதரவாய் பற்றி.....
தட்டு தடுமாறி வார்த்தைகள் தேடி .....
விழி பார்க்க முடியாமல்
என் சட்டை பொத்தான் பார்த்து....

என்னை காதலிக்கவில்லை என்று
நீ சொன்ன போது தான் தெரிந்தது...
என்னை நீ எவ்வளவு காதலிக்கிறாய்
என்று.....

சொல்லிய மறுகணம் நான் என்னவானேனோ
என பதறி நீ என் விழி பார்த்த போது
அது உறுதியும் ஆயிற்று...

No comments:

Post a Comment